ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலியுடன் இணைந்து நடித்ததில் இருந்து அவருடனான காதல் கிசுகிசுவில் சிக்கியிருப்பவர் ஜெய். அதையடுத்து, திரு மணம் என்னும் நிக்கா படத்தில் நடித்து வந்தபோது அப்பட நாயகியான நஸ்ரியாவும், ஜெய்யும் சீரியசாக காதலிப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதைத் தொடர்ந்து சில மாதங்களிலேயே நஸ்ரியா மலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அந்த செய்திகள் அடங்கி விட்டது.
இந்த நிலையில், தற்போது எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் படங்களில் மீண்டும் ஜெய்யும், அஞ்சலியும் ஜோடி சேர்ந்திருப்பதால் மறுபடியும் அவரிகளைப்பற்றிய காதல் செய்திகள் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. இப்படி அவர்கள் காதலர்களாக நடித்து வரும் எனக்கு வாய்த்த அடிமை படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் பிரணிதாவும், பலூன் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் ஜனனி அய்யரும் அந்தந்த படங்களில் ஜெய்யை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஆனால் இறுதியில் ஜெய்-அஞ்சலி இருவரின் காதலே சக்சஸ் ஆவது போன்றுதான் இந்த படங்களின் க்ளைமாக்ஸ் அமைந்துள்ளதாம். அதோடு, எங்கேயும் எப்போதும் படத்தில் பெரிதாக ஒட்டாமல் நடித்திருந்த ஜெய்-அஞ்சலி ஜோடி, இந்த படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் ஓருயிரும் ஈருடலுமாய் கலந்து தத்ரூபமாக நடித்து வருகிறார்களாம்.