ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கானல் நீர் தாகம் தீர்க்குமா? இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் தன் கேரியரை வீணடித்துக் கொண்டவர் ஜனனி அய்யர். பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் அறிமுகமான இவருடைய அழகுக்கும் திறமைக்கும் ஓரளவு முன்னேறி இருக்க வேண்டியவர்தான். ஆனால் இன்னும் பேசப்படாத நடிகையாகத் தான் இருக்கிறார்.
இந்நிலையில் இனி கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்த ஜனனி அய்யருக்கு செகன்ட் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெய், அஞ்சலி இணைந்து நடிக்கும் 'பலூன்' என்ற படத்தில் செகன்ட் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
‛‛அனைவரையும் ஈர்க்க கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்கு கூடுதல் மதிப்பை தரும் என பெரிதும் நம்புகிறோம் என்று கூறியுள்ளார்'' இயக்குநர் சினிஷ்.
பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.