ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கிராமத்து நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் விமல். அப்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டடித்ததால் அவரைத்தேடி கிராமத்து கதைகளே செல்கின்றன. ஆனால், விமலுக்கு தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளில் நடிப்பதில் உடன்பாடில்லை. தன் மீது கிராமத்து நாயகன் என்கிற முத்திரை அழுத்தமாக பதிந்து விடக்கூடாது என்பதற்காக நகரத்து கதைகளில் நடிப்பதற்காக கதை கேட்டு வந்தவர், தற்போது தேவதையை கண்டேன், மலைக்கோட்டை, பட்டத்து யானை உள்பட பல படங்களை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்தில் மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவராக நடித்து வருகிறார் விமல். இப்போதை கல்லூரி மாணவர்களைப்போன்று லேட்டஸ்டான காஸ்ட்யூம்களை அணிந்தும் கலக்கி வருகிறாராம். அந்த வகையில், கல்லூரி பெண்களை கலாய்ப்பது மட்டுமின்றி, மாணவர்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் தில்லான மாணவனாகவும் நடிக்கிறாராம் விமல். அதனால் இந்த படம் விமலின் கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள்.