ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேசிய விருது பெற்ற இயக்குனர் சிவாஜி லோதன், இந்தியில் இயக்கி உள்ள படம் '31 அக்டோபர்'. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது நடந்த வன்முறை கலவரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. சோகா அலிகான், வீரதாஸ், தயா சங்கர் பாண்டே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளும், வசனங்களும் இருப்பதால் படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து இயக்குனர் சிவாஜி லோதன் மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பினார். அவர்கள் படத்தில் 7 நிமிட காட்சியை நீக்கினால் ஏ சான்றிதழுடன் அனுமதி அளிப்பதாக தெரிவித்தனர். ஆனால் அந்த 7 நிமிட காட்சிகள் முக்கியமானது. அதனால் நீக்க முடியாது என்று கூறினார் இயக்குனர்.
பின்னர் அந்த 7 நிமிட காட்சியை வேறுவிதமாக படமாக்கி அதை படத்தில் இணைத்து படத்தை மறுதணிக்கை குழுவிற்கு மீண்டும் போட்டுக் காட்டினார். இதில் திருப்தி அடைந்த தணிக்கை குழு படத்தில் 9 இடத்தில் சிறிய கட் கொடுத்து சான்றிதழ் வழங்கியது. படம் விரைவில் வெளிவர இருக்கிறது.