ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சேதுராமன், கதாசிரியர் வியாட்நாம் வீடு சுந்தரம், நடிகை ஜோதிலட்சுமி, பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம், பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர், கவிஞர் நா. முத்துக்குமார்... என 10 நாட்களுக்குள் வரிசையாக திரையுலகினர் மரணம் அடைந்திருப்பது திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 4
பிரபல சினிமா தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன்(83). இவர் தமிழில் ''தேவி தரிசனம், தேவி திருவிளையாடல், யாமிருக்க பயமேன், அந்த சில நாட்கள், சூப்பர் குடும்பம்'' உள்ளிட்ட சுமார் 27 படங்களை தயாரித்துள்ளார். இவருக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஆகஸ்ட் 6
பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும், நடிகருமான வியட்நாம்வீடு சுந்தரம்(வயது 72) உடல்நலக்குறைவு மற்றும் வயதுமூப்பு காரணமாக, சென்னை, தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் ஆகஸ்ட் 6-ம் தேதி காலமானார்.
ஆகஸ்ட் 8
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி(வயது 68) ஆகஸ்ட் 9ம் தேதி காலமானார்.
ஆகஸ்ட் 9
ஜோதிலட்சுமியின் உடல் அடக்கம் பண்ணுவதற்குள்ளேயே திரைத்துறையினருக்கும் மற்றுமொரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்தது. தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர்... என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் (வயது 75) காலமானார்.
ஆகஸ்ட் 10
பஞ்சு அருணாசல் மரணம் அடைந்த மறுநாளே, சூர்யாவை வைத்து ‛பேரழகன்' படத்தை இயக்கிய கேரளாவை சேர்ந்த இயக்குநர் சசி சங்கர்(வயது 58), ஆகஸ்ட் 10-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.
ஆகஸ்ட் 14
மேலே சொன்ன ஐந்து பேரும் வயதானவர்கள். ஆனால் 41-வது வயதிலேயே ஒரு நல்ல கவிஞனை காலன் அழைத்து கொண்டு போகும் என்று யாரும் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். அவர் தான் கவிஞர் நா முத்துக்குமார். மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், அந்த நோயின் தாக்கம் தீவிரமானதால் நேற்று(ஆகஸ்ட் 14ம் தேதி) மரணம் அடைந்தார்.
இப்படி 10 நாட்களிலேயே 6 திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணத்தை தழுவியது திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.