மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மா.கா.பா.ஆனந்த். வானவராயன் வல்லவராயன் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்த அவரது நடிப்பில் பின்னர் நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் எதிர்பார்த்தபடி படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனபோதும், தற்போது ஒரே நேரத்தில் பஞ்சுமிட்டய், கடலை, மாணிக் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மா.கா.பா.ஆனந்த்.
இந்த படங்கள் பற்றி அவர் கூறுகையில், தற்போது நான் நடித்து வரும் மூன்று படங்களிலுமே காமெடி கலந்த கதைகளில்தான் நடிக்கிறேன். காரணம், இப்போதுதான் நான் சினிமாவில் வளரத் தொடங்கியிருக்கிறேன். இந்த நேரத்தில் ஆக்சன், சமூக பிரச்னை போன்ற அழுத்தமான கதைகளில் நடித்தால் அதை ரசிகர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் இப்போதைக்கு காமெடி கலந்த காதல் கதைகளுக்கே முதலிடம் கொடுக்கிறேன். தற்போது நான் நடிக்கும் மூன்று படங்களுமே வெவ்வேறு கதைக்களமாக இருந்தபோதும், காமெடியே பிரதானமாக உள்ளது என்கிறார் மா.கா.பா.ஆனந்த்.