ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா நடித்துள்ள 'பாபு பங்காரம்' தெலுங்குப் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 'செல்வி' என்ற பெயரில் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகிறது. தமிழில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா தமிழைத் தவிர வேறு மொழிப் படங்களில் அதிகம் நடிப்பதில்லை. ஏன், அவருடைய தாய்மொழியான மலையாளப் படங்களில் கூட தமிழில் நடிப்பதைப் போல் அதிகப் படங்களில் நடிப்பதில்லை.
நயன்தாரா தான் நடிக்கும் எந்த ஒரு படத்திற்கும் பிரமோஷன் நிகழ்வுகளுக்கு வருவது கிடையாது. அவரை வைத்து தமிழில் படங்களை எடுக்கும் தயாரிப்பாளர்கள் அது பற்றி கவலைப்படுவதும் கிடையாது. படத்தில் அவர் இருந்தாலே போதும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நினைப்பதே அதற்குக் காரணம். ஆனால், தெலுங்கில் அப்படியில்லை. படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் கண்டிப்பாக படங்களின் பிரமோஷனுக்கு வரவேண்டும் என்று படத்திற்கான ஒப்பந்தத்திலேயே சேர்த்துவிடுவார்கள்.
நயன்தாரா நடித்து இன்று வெளியாகும் 'பாபு பங்காரம்' படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்த போதே படத்தின் பிரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என படத்தின் நாயகன் வெங்கடேஷ் சமீபத்தில் தெரிவித்தார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் நயன்தாராவின் இந்த செயலைப் பிடிக்காமல் இனி அவரை தெலுங்குப் படங்களில் நடிக்க அழைக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக டோலிவுட் வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன.
இருந்தாலும் சில முன்னணி நாயகர்கள் தங்களது படங்களில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை தொடர்ந்து அணுகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாலகிருஷ்ணா அவருடைய 100வது படத்திற்கும், சிரஞ்சீவி அவருடைய 150 படத்திற்கும் நயன்தாராவை நடிக்கக் கேட்டனர் என்பதும் தனிக் கதை.
தெலுங்குத் தயாரிப்பாளர்களின் எதிர்ப்பால் இனி தெலுங்குப் படங்களில் நடிக்க வேண்டாம் என நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அனேகமாக இன்று வெளியாகும் 'பாபு பங்காரம்' படம்தான் நயன்தாராவின் கடைசி தெலுங்குப் படமாக இருக்கும்.