ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் கடந்த நான்கு நாளில், மூன்று பிரபலங்களின் மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. அதிலும் நேற்று(ஆகஸ்ட் 9ம் தேதி) இரண்டு பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர், இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் சிவக்குமார் கூறினார்.
ஆகஸ்ட் 6ம் தேதி, இயக்குநரும், கதாசிரியருமான ‛வியட்நாம் வீடு' சுந்தரம் உடலநலக்குறைவால் காலமானார். நடிகை ஜோதி லட்சுமியும், தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் நேற்று காலமானார்கள். இது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் சிவக்குமார், பஞ்சு அருணாசலத்தின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், ‛‛என்னைப்போன்ற நடிகர்களை வளர்த்துவிட்டர் பஞ்சு அருணாசலம் அவர்கள். அவரின் மறைவு தமிழ்சினிமாவிற்கு பெரிய இழப்பு. வியட்நாம் வீடு சுந்தரம், ஜோதிலட்சுமி, பஞ்சு அருணாசலம்... இப்படி எங்க காலத்தை சேர்ந்த கலைஞர்கள் இந்த மண்ணை விட்டு செல்வது கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்'' என்று கூறினார்.
மூன்று திரை ஜாம்பவான்களின் மறைவு, சிவக்குமாரை மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் பலரையும் கலங்க செய்துள்ளது.