ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காலத்தில் அழியாத பல பாடல்களைக் கொடுத்த கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இளையராஜா என்ற திறமைசாலியை அடையாளம் கண்டு திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம். தமிழ்த் திரையுலகம் ஒரு திறமையான தயாரிப்பாளரை, கதை, திரைக்கதையாசிரியரை, வசனகர்த்தாவை இன்று இழந்துவிட்டது. கடந்த 30 வருடங்களில் அவரைப் போல ஒரு கதையாசிரியர் தமிழ்த் திரையுலகத்தில் பெயர் எடுக்கவில்லை என தாராளமாகச் சொல்லலாம். தமிழ் சினிமாவுக்கு கதை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தன்னுடைய பல படங்களின் வெற்றி மூலம் நிரூபித்தவர் பஞ்சு அருணாச்சலம்.
இன்றைய தலைமுறை ரசிகர்களும் கொண்டாடும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது ஆரம்ப காலங்களில் அவர்களிருவரையும் 'செதுக்கியவர்'களில் பஞ்சு அருணாச்சலம் முதன்மையானர்.
ரஜினிகாந்தின் நடிப்புக்கு சிறந்த படங்களாக இன்றும் குறிப்பிடப்படும் 'பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல்,” ஆகிய படங்களைத் தயாரித்து, எதை எழுதியவர். ரஜினிகாந்த்தை முதன் முதலாக 'பாசிட்டிவ்' ஆன கதாபாத்திரத்தில் 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் நடிக்க வைத்தவர். மேலும், ரஜினிகாந்த் நடித்த “முரட்டுக் காளை, கழுகு, போக்கிரி ராஜா, பாயும் புலி, அடுத்த வாரிசு, தம்பிக்கு எந்த ஊரு, மனிதன், தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, அதிசயப் பிறவி, தர்மதுரை, பாண்டியன், வீரா” ஆகிய படங்களுக்கு கதை எழுதியவர்.
கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிக்க 1979ல் வெளிவந்த 'கல்யாணராமன்' படத்தின் மூலம் கமல்ஹாசனுக்கு ஒரு கமர்ஷியல் ஹீரோ என்ற அந்தஸ்தையும் கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம். தொடர்ந்து 'உல்லாசப் பறவைகள், மீண்டும் கோகிலா, எல்லாம் இன்ப மயம், சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே, ஜப்பானில் கல்யாணராமன், உயர்ந்த உள்ளம், அபூர்வ சகோதரர்கள், சிங்காரவேலன்,'' ஆகிய கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு கதை எழுதியவர்.
தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நடிகர்களுக்கு இத்தனை படங்களுக்கு கதை எழுதி சாதனை புரிந்தவர் பஞ்சு அருணாச்சலம் மட்டுமே. இன்று கதைக்காக ஆங்கிலப் படங்களையும் கொரியன் படங்களையும் காப்பி அடிக்கும் இயக்குனர்கள் பஞ்சு அருணாச்சலத்தின் திரையுலக அனுபவங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.