ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரைப்படங்களின் புரமோஷனுக்காக நடத்தப்படும் பிரஸ்மீட்களுக்கு அழைத்தால் சமீபகாலமாக நட்சத்திரங்கள் அலறுகின்றனர். காரணம்... சில வருடங்களுக்க முன் மீடியாக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மீடியாக்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது. எனவே பட புரேமோஷன்களுக்கு அழைத்தால் முன்னணி நட்சத்திரங்கள் வருவதில்லை.
அஜித், நயன்தாரா படத்தில் நடிப்பதோடு சரி... அதன் பிறகு படம் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் வர மாட்டார்கள். இவர்களைப் பார்த்து ஜெய் போன்ற சின்ன ஹீரோக்களும் சீன் போட ஆரம்பித்துவிட்டனர். இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பவர் ஜீவா. கடந்த வாரம் ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'திருநாள்' படம் வெளியானது. படத்தின் நாயகனான ஜீவாவை அழைத்தபோது அவரும் வர மறுத்துவிட்டார். கதாநாயகியே வராதபோது தான் வந்தால் தன்னுடைய கெத்து குறைந்துவிடும் என்பதால் வர மாட்டடேன் என்று சொல்விட்டாராம்.
அதேநாளில் ஜெய் நடித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படமும் வெளியானது. தன்னை அஜித்தாக கற்பனை செய்து கொண்டிருப்பதால் ஜெய்யும் புரமோஷனுக்கு வரவில்லை.