ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏற்கனவே வாழ்ந்து மறைந்த பிரபலங்கள் பற்றி படம் எடுப்பது என்பது கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட காட்டில் தினம் தினம் வாக்கிங் போய் வருவது மாதிரித்தான். எங்கே வெடி இருக்கும், எப்போது வெடிக்கும் என தெரியாது.. அதேபோல பிரபலங்களை பற்றி செவி வழியாக கேள்விப்பட்டவற்றை பற்றியோ அல்லது அவர்களே எழுதிய சுயசரிதையை மையப்படுத்தியோ படம் இயக்கும்போது ஆளாளுக்கு கேள்வி கேட்கும் அபாயம் உண்டு.. புதுப்புது சர்ச்சைகள் வெடிக்கும் சூழலும் உண்டு.. இது அனைத்தையும் உணர்ந்தே தான் பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து தான் இயக்கி வரும் 'கமலா சுரையா' படத்திற்கு எந்த சர்ச்சைகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறாராம்.
வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த கமலா சுரையா யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலாவாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மையின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இதில் கூடக்குறைய எது இருந்தாலும் இரண்டு மதத்தினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கிவிடும் என்பதில் கவனமாக இருக்கிறாராம் இயக்குனர் கமல்.