ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் கமல்ஹாசன், இன்று(ஆகஸ்ட் 5ம் தேதி) காலை வீடு திரும்பினார்.
சபாஷ் நாயுடு படத்தின் ஒருபகுதியை அமெரிக்காவில் முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல், ஜூலை, 13ம் தேதி இரவு, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டு மாடிப்படியில் இறங்கிய போது, தவறி விழுந்தார். இதையடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று வாரங்களாக கமல் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் இருவரின் உதவியுடன் எழுந்து நடந்ததாக கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கமல் நேற்று (ஆகஸ்ட் 4ம் தேதி) இரவு வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது. பகலில் அவர் வீடு திரும்பினால் மருத்துவமனையில் ஏராளமான ரசிகர்கள் கூடி விடுவார்கள் என்ற காரணத்தால், இரவு நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஆனால் கடைசி நேரத்தில் முடிவு மாற்றப்பட்டு இன்று(ஆகஸ்ட் 5ம் தேதி) காலை வீடு திரும்பினார்.
கமல் வீடு திரும்பினாலும் சில வாரங்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியிருக்கிறது, எனவே அவர் பூரண குணமடைய ஒருமாத காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.