அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
'குக்கூ' என்ற வெற்றிப் படத்தை கொடுத்த எழுத்தாளர் ராஜு முருகன் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் 'ஜோக்கர்'. வருகிற 12ந் தேதி வெளிவருகிறது. 'ஆரண்யகாண்டம்' படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் கதையின் நாயகன், ரம்யா என்ற புதுமுகம் நாயகி, இவர்கள் தவிர எழுத்தாளர் மு.ராமசாமி, உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் தயாரித்துள்ளனர். “ஜோக்கர் பக்கா அரசியல் படம்” என்கிறார் ராஜு முருகன்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இந்த நாட்டின் பிரதமரிலிருந்து வார்டு கவுன்சிலர் வரையிலான அதிகார மையங்களை தேர்ந்தெடுப்பது சாதாரண குடிகன்தான். அவன் தேர்ந்தெடுத்த தலைமை சரியில்லாதபோது அந்த அதிகாரத்தை பறிக்கிற அதிகாரம் அவனுக்கு இல்லை. அதனால்தான் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வருகிறவர்கள், தங்களை வெற்றி பெற வைத்தவனையே கொடுமைப்படுத்த துணிகிறார்கள். அதிகாரத்தை திரும்ப பறிக்கிற அதிகாரம் மக்களுக்கு வேண்டும் என்கிற அரசியலை ஒரு எளிய காதல் கதையின் வழியாக சொல்கிற படம்.
எல்லோருக்கும் ஜோக்கராக தெரிகிற ஒரு சாதாரண மனிதன் மக்களுக்கு தேவையான ஒரு விஷயத்துக்காக போராடுகிற கதை. ஒரு சமான்யா மனிதனை அரசும், அதிகார மையங்களும் எப்படி துரத்தி அடிக்கிறது, அவமதிக்கிறது, புரட்டி போடுகிறது என்பது பற்றி படம் பேசுகிறது. இது அரசியல் படம் தான் ஆனால் தேர்தல் அரசியல் படம் அல்ல. மக்களுக்கான அரசியல் படம். படத்தின் வெற்றியை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனாலும் இது ஒரு புதிய விதையை, புதிய சிந்தனையை, புதிக விவாத களத்தை நிச்சயம் உருவாக்கும் என்கிறார் ராஜு முருகன்.