ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம்-தமிழ் படங்களில் நடித்து வருவதைத் தொடர்ந்து அவரது அண்ணன் மகன் மக்பூல் சல்மானும் தற்போது மலையாள சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறார். மலையாளத்தில் பத்து படங்களுக்கு மேல் நடித்து விட்ட அவர், சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான கசாபா படத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், கண்களால் ஒரு கவிதை -என்ற படம் மூலம் அவர் தமிழுக்கு வந்திருக்கிறார்.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மானுக்கு ஜோடியாக அக்ஷா பட் நடித்துள்ளார். இவர் அர்ஜூன். ஷாம் நடித்த ஒரு மெல்லிய கோடு படத்தில் நாயகியாக நடித்தவர். காதல் மற்றும் காமெடி கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் கண்களால் ஒரு கவிதை படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.