ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் 'மாற்றான் தோட்டத்து மல்லிகை'. ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனாராய், நிஷா, ஆரிஷா நடிக்கிறார்கள். ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ்பாஸ்கர் இசை அமைக்கிறார் 'கள்ளச்சாவி' படத்தை இயக்கிய ராஜேஷ்வரன் இயக்குகிறார். இது செல்போனில் அந்தரங்கத்தை படம் எடுத்து அதனால் சிக்கி சின்னாபின்னமாகிறவர்கள் பற்றிய கதையாம். இதைப் பற்றி இயக்குனர் ராஜேஷ்வரன் கூறியதாவது:
டிஜிட்டல் புரட்சியில் முக்கியமான வரவு வீடியோ கேமரா அமைந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சிறிய வகை கையடக்க கேமராக்கள், காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அந்தரமாக இருப்பவர்கள் அதை படம்பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள். சில நேரங்களில் அந்த செல்போன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுது பார்க்க தரும்போது அந்த வீடியோ காட்சியை காணும் நபர்கள் தான் பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கும் அனுப்புவது. இணையதளங்களில் பரப்பி விடுவது. என செயல்படுவதினால் இதில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் சமுதாயத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள். சமீபகலாங்களில் இதனால் சில தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கொலை சம்பவங்களும் நடந்தேறியது. இது போன்ற செயல்பாடுகள் தவறு என்று வலியுறுத்தும் விதமாக தயாராகியுள்ள படம். என்கிறார் இயக்குனர் ராஜேஷ்வரன்.