ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நயன்தாராவிற்கு ஒரு கதை பிடித்திருந்தால் அந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்கினாலும் தயங்காமல் நடிக்கிறார். 'மாயா', 'டோரா' படங்கள் புதுமுகங்களின் படங்கள். தற்போதும் அவர் ஒரு புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கோபி நாயனார் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இது ஹீரோயினை சுற்றி நடக்கும் கதை. நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கிறார். ஒரு தண்ணீர் பிரச்சினையை மாவட்ட கலெக்டர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை. 'காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும், மற்ற நடிகர் நடிகைகளும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிக்கிறார்.
"தண்ணீர் பிரச்சனை நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு தான் நான் இந்த படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே நயன்தாரா இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாங்கள் படமாக்கியிருக்கிறோம். சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படமானது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்." என்கிறார் இயக்குனர் கோபி நாயனார்..