சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இசை அமைப்பாளர் ஜிப்ரான் 'சென்னை டூ சிங்கப்பூர்' என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. 6 பாடல்களையும் 6 நாடுகளில் வெளியிட்டு சாதனை படைக்க நினைத்தார். அதுவும் 6 நாடுகளுக்கும் காரிலேயே பயணம் செய்து இந்த சாதனையை நிகழ்த்துகிறார். வருகிற ஆகஸ்ட் 12ந் தேதி சென்னையில் ஒரு பாடலை வெளியிட்டுவிட்டு ஜிப்பரான் மற்றும் படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர், படத்தில் நடித்துள்ள கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன் ஆகியோர் மூன்று கார்களில் புறப்படுகிறார்கள்.
சென்னையிலிருந்து பூட்டான், மியான்மர், தாய்லாந்து, மலேசியா வழியாக சிங்கப்பூர் செல்கிறார்கள். போகும் வழியில் இந்த நாடுகளில் பாடல்களை வெளியிடுகிறார்கள்.
இந்தப் பயணம் பற்றி ஜிப்ரான் கூறியதாவது: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வான் வழியாகத் தான் செல்ல வேண்டும் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இனி சாலை வழியாகவும் போகலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். 20 நாள் பயணம்.
'சென்னை டு சிங்கப்பூர்' திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கதைக்களம் புதிது, இயக்குனர் புதுமுகம், முன்னணி கதாப்பாத்திரங்கள் புதுமுகம், என இருக்கும் சென்னை டு சிங்கப்பூர் படத்தின் இசை வெளியீடும் புதுமையாக தான் இருக்க வேண்டும் என கருதி, நாங்கள் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறோம். நிச்சயம் எங்களின் இந்த இசை பயணம் ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.