ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுற்றுலா படத்தின் பப்ளிசிட்டிக்காக எங்களைப் பலிகடாவாக்கி விட்டனர் என்று நடிகர் பிரஜினும், அவரது மனைவி நடிகை சான்ட்ராவும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த வாரம் சுற்றுலா என்ற படத்தின் சூட்டிங்கிற்காக குன்னூரில் இருந்த நடிகர் பிரஜினும், சான்ட்ராவும் மாயமாகி விட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு ரத்து ஆனதுடன் நாளன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம ஏற்பட்டு விட்டதாகவும் படத்தின் தயாரிப்பாளர் பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பிரஜினும், சான்ட்ராவும் பரபரப்பு பதில் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள பேட்டியில், 23 நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான். வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.
இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கி விட்டனர், என்று குமுறியிருக்கிறார்கள்.