காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
'கபாலி' படம் கடந்த வாரம் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துக் கொண்டிருந்தாலும், படம் பற்றிய பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. சாதி, தமிழர்கள், மலேசியா என புதிது புதிதாக யோசித்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தவிர்க்க முடியாத ஒரு சிக்கலில் தற்போது 'கபாலி' படம் மாட்டிக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் விருதுகளை, பட்டங்களை தங்களது சொந்த விளம்பரத்திற்காகப் பயன்படுத்த முடியாது. அதிலும் குறிப்பாக 'பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண்' ஆகிய பட்டங்களைப் பெறுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் அந்தப் பட்டங்களைப் பெற்றவர்கள் திரைப்பட விளம்பரங்களிலும், படங்களின் டைட்டிலிலும் அந்தப் பட்டத்தைப் போடவே கூடாது.
தற்போது வெளியாகியுள்ள 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் பெயர் டைட்டிலில் வரும் போது 'பத்ம விபூஷண்' ரஜினிகாந்த் என இருக்கிறது. இதை எதிர்த்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெலுங்கானா ரக்ஷின வேதிகே அமைப்பு சென்சார் போர்டிடம் அது குறித்து புகார் தெரிவித்துள்ளார்கள். அந்தப் புகாரில் 'விதி 18(1)-ன் கீழ் பத்ம விருதுகளை பெயருக்கு முன் சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அப்படியிருக்க 'கபாலி' பட டைட்டிலில் அதை எப்படிச் சேர்த்தார்கள் எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான மோகன் பாபு அவருடைய 'டைனிகைன ரெட்டி' படத்தின் டைட்டிலில் பத்மஸ்ரீ பட்டத்தைச் சேர்த்ததால் வழக்குச் சிக்கலில் சிக்கி பின்னர் அந்தப் பட்டம் டைட்டிலிலிருந்து நீக்கப்பட்டது.
தற்போது 'கபாலி' படத்தில் ரஜினிகாந்தின் பெயருக்கு முன்னால் 'பத்ம விபூஷண்' பட்டத்தைப் போட்டுள்ளதால் ரஜினிகாந்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தேசிய விருதை அவமதித்த குற்றத்திற்காக அதைப் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.