பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
'கபாலி' படம் மாபெரும் வெற்றி, 300 கோடி ரூபாய் வசூல் என தயாரிப்புத் தரப்பிலிருந்தே அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த வாரம் வெளியான படம் அதிகமான தியேட்டர்களில் வெளியானதால் முதல் சில நாட்களிலேயே பலரும் படத்தைப் பார்த்ததால் அந்த அளவிற்கு வசூல் ஆகியிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை தினம் என்பதால் பட வெளியீட்டிற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களால் இந்த வார இறுதி வசூலும் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
இதனிடையே, 'கபாலி' படம் பற்றிய பல்வேறு விதமான நிகழ்வுகள் பட வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின. நேற்று வரை நடந்த 'சக்சஸ் மீட்' வரை படத்தின் நாயகன் ரஜினிகாந்த், நாயகி ராதிகா ஆப்தே ஆகியோர் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. ரஜினிகாந்த் அமெரிக்காவிலிருந்தே சமீபத்தில்தான் வந்தார். வந்த பின் சோ ராமசாமி படம் பார்த்த நிகழ்வில் மட்டுமே வந்து கலந்து கொண்டார். ஆனால், ராதிகா ஆப்தே 'கபாலி' சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது என்பது தமிழ்த் திரையுலகத்திலேயே நீண்ட காலமாக இருக்கும் பல ஹீரோயின்களின் கனவாக உள்ளது. அவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு ராதிகா ஆப்தேவுக்குக் கிடைத்தது. அவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்படுகிறது. ஆனாலும், அவ்வளவு மகிழ்ச்சியையும் ரசிகர்களிடம் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள முடியவில்லையே என ராதிகா வருத்தத்தில் இருக்கிறாராம்.
ஹிந்தியில் அவர் தற்போது நடித்து வரும் 'கோல்' படப்பிடிப்பில் இருப்பதால் 'கபாலி' கொண்டாட்டங்கள் எதிலும் அவரால் கலந்து கொள்ள முடியவில்லையாம். இருந்தாலும் ரஜினிகாந்த் நேரடியாக அவருக்கே போன் செய்து பாராட்டியதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளாராம் ராதிகா. ரஜினியின் போன் பேச்சு ராதிகாவுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாம். இருந்தாலும் முதல் நாள் முதல் கொண்டாட்டங்களை நேரில் பார்க்க முடியாத வருத்தம் தனக்கு இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.