ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதமி மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார். பாபநாசம் படத்திற்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தயாராகியிருக்கும் 'நமது' படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பாபநாசம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கேற்ற கதைகளாக அமையவில்லை. அக்கா, அண்ணி மாதிரியான முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிக்கவும் விருப்பமில்லை. 120 படத்துக்குமேல் நடித்து விட்டேன். அப்போதும் சரி, இப்போதும் சரி எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். பணத்துக்காகவோ, கட்டாயத்தின் பேரிலோ நடிக்க மாட்டேன்.
எனக்கு நான் தான் ரசிககை விமர்சகி எல்லாம். என் நடிப்பை நானே விமர்சனம் செய்து கொள்வேன். மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலைப்பட படமாட்டேன். மீண்டும் நடிக்க வந்திருப்பது என் மகளுக்கும், கமலுக்கும் சந்தோஷம். இருவருமே என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் மகள் சுபலட்சுமி தற்போது பிளஸ் 2 படிக்கிறாள். அவளுக்கு நடிப்பை விட படம் இயக்குவதில் தான் ஆர்வம் இருக்கிறது. நானும் நிறைய படங்களில் நடித்து விட்டேன். படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. விரைவில் அது நடக்கும் என்றார்.