ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்தபோது, இனிமேல் அவர் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பார் போலிருக்கு. அதைத்தான் இந்த படத்தின் தலைப்பு மூலம் சொல்லியிருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், அப்படத்தின் ஆடியோ விழாவில், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதற்காக இந்த டைட்டீலை வைக்கவில்லை. இந்த கதைக்கு இதுதான் பொருத்தமாக இருந்தது. அதனால் டைரக்டர் வைத்திருக்கிறார் என்று சொன்ன சந்தானம், ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாகவும் நடிப்பேன் என்று அந்த மேடையில் சொன்னார்.
அதன்காரணமாக, அதையடுத்து அஜித்தின் 57வது படம் மற்றும் ஆர்யா நடிக் கும் ஒரு புதிய படத்தில் காமெடியனாக நடிப்பதற்கும் சந்தானத்திடம் பேசியிருந்தனர். அவரும் ஓகே சொல்லியிருந்தார். ஆனால், தில்லுக்குத்துட்டு படத்தின் வெற்றி காரணமாக இனிமேல் காமெடியனாக நடிப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் சந்தானம். அதனால் அந்த படங்களில் தன்னால் நடிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விலகி விட்டார். இதனால் அஜித்தரப்பு பெரிதாக பீல் பண்ணாதபோதும், ஆர்யாதான் எனது நண்பர் சந்தானம் இப்படி வாக்கு தவறி விட்டாரே -என்று பீலிங்ஸை வெளிப்படுத்தினாராம்.