ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ரஜினி நடித்து வெளிவந்துள்ள, கபாலி திரைப்படத்தால், தெலுங்கானா மாநிலத்தில், ஒரு புத்தகத்தின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கபாலி படத்தில், அறிமுக காட்சியில், மை பாதர் பாலய்யா என்ற புத்தகத்தை ரஜினி படித்துக் கொண்டிருப்பார். படம் வெளியானதைத் தொடர்ந்து, இந்த புத்தகம் குறித்து மக்கள் தேடத் துவங்கியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் சத்தியநாராயணா, தெலுங்கில் எழுதிய, மா நானயா பாலையா என்ற புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு தான், படத்தில் இடம்பெற்றுள்ளது. கரீம் நகரைச் சேர்ந்த சத்தியநாராயணா, தலித் மக்களின் போராட்டத்தை விளக்கும் வகையில், தன் தந்தை பாலையா சந்திந்த வாழ்க்கை, சமூகப் போராட்டங்கள், அதில் இருந்து மீண்டு, தற்போது தன் குடும்பம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து, இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
கடந்த, 2011ல், இந்த புத்தகம் முதலில் வெளிவந்தது. கபாலி படம் வெளியான பின், இவருக்கு பலர் வாழ்த்துக்களை கூறத் துவங்கியுள்ளனர். தன் புத்தகத்தை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து சத்தியநாராயணா அனுப்பி செய்தியை தொடர்ந்து, படத்தின் இயக்குனர் ரஞ்சித் இவரை அழைத்து பாராட்டியுள்ளார்.