ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் ராஜேஷிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் பொன்ராம். அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்துக்கு ராஜேஷ்.எம் வசனம் எழுதியிருந்தார். சிவகார்த்திகேயனுடன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்பட பலர் நடித்த அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதனால் அதையடுத்தும் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணியில் ரஜினிமுருகன் படத்தை இயக்கினார் பொன்ராம். அந்த படமும் ஹிட்டாக அமைந்தது. இதனால் தனது மூன்றாவது படத்தையும் சிவகார்த்திகேயன்-சூரியை வைத்தே பொன்ராம் இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், பொன்ராம் அடுத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் இல்லையாம். அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி விட்ட பொன்ராம், ஆர்யா, விஷால் போன்ற ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறாராம். தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கினால் முந்தின படங்களின் சாயலே அடுத்த படத்திலும் தெரியும் என்பதால், ஒரு சேஞ்சுக்காக ஹீரோவை மாற்றுகிறாராம் பொன்ராம். அதேசமயம், அவரது மூன்றாவது படத்திலும் சூரி இருக்கிறாராம். அந்த படமும் கலகலப்பான காமெடி கதையில்தான் உருவாகிறதாம்.