ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' படத்தை இயக்க உள்ளார். மீண்டும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி இணைகிறது. இதுவும் சரித்திரகால படம் தான். இப்படத்தில் இவர்கள் இருவர் தவிர இன்னொரு முக்கிய ரோலும் உள்ளது. அதாவது தீபிகாவின் கணவர் ரோலில் நடிக்க ஒரு நடிகர் தேவை, அதனால் இப்படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத் கானை நடிக்க கேட்டுள்ளார், அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படத்தில் ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜி வேடத்திலும், தீபிகா பத்மாவதி ரோலிலும், அவரது கணவராக பவாத் கானும் நடிக்க உள்ளனர். பாஜிராவ் மஸ்தானி படத்தை காட்டிலும் இப்படம் இன்னும் பிரமாண்டமாய் உருவாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் லீடு ரோலில் நடிக்க உள்ள இந்த மூவரிடமும் சுமார் 200 நாட்கள் சஞ்சய் லீலா பன்சாலி கால்ஷீட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை ஆரம்பிக்க இருக்கும் இயக்குநர், அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.