ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன் அடுத்தகட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டிணத்தில் நடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கான ப்ரீ புரடக்ஷன்ஸ் வேலையில் ஈடுபட்டிருந்தபோதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
தன் அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் கமல். தொடர்ந்து கமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் சில நாட்கள் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தெரிகிறது. அதன்பின்னர் அவர் வீடு திரும்ப உள்ளார்.
கமலை குறைந்தது ஒரு மாத காலமாவது படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். எனவே, 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், செப்டம்பரில் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்பதில் கமல் தீர்மானமாக இருக்கிறாராம்.
சபாஷ் நாயுடு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தாராம் கமல். தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் இந்த வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறாராம்.
இதனிடையே முதலில் மலையாள இயக்குனர் ராஜீவ்குமார்தான் 'சபாஷ் நாயுடு' படத்தை இயக்குவதாக இருந்தது. லாஸ் ஏஞ்செல்ஸிற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ராஜீவ்குமார். எனவே இயக்குனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் கமல். தற்போது அவருக்கும் அடிபட்டதால் சபாஷ் நாயுடு படத்தின் மீது எதிர்மறையான கருத்துக்கள் படத்துறையில் பரவி வருகிறது.