ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வெளியாகும் படங்களில் பெரும்பாலான படங்கள் இரண்டு வாரங்களைக் கடப்பதே தற்பேது மிகப் பெரிய கேள்வியாக உள்ள சூழ்நிலையில் இரண்டு புதிய படங்கள் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளன. ஜுலை 1ம் தேதி வெளியான 'அப்பா, ஜாக்சன் துரை' ஆகிய இரண்டு படங்களும் நாளை 25வது நாளைக் கொண்டாட உள்ளன. ஆனால், ஒரு நாள் முன்னதாகவே இன்றே அந்த 25வது நாளை படக் குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.
சமுத்திரக்கனி இயக்கம் நடிப்பில் கதையை மட்டுமே நம்பி வந்த படமான 'அப்பா' படம் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிய ஹீரோக்கள் நடித்த கமர்ஷியல் படங்களுக்கு நிகராக இந்தப் படமும் நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது. நல்ல படங்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் சரியாகக் கொடுத்தால் அந்தப் படத்தை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு இந்தப் படம் சரியான உதாரணம்.
25வது நாளைத் தொடும் மற்றொரு படம் 'ஜாக்சன் துரை'. தரணிதரன் இயக்கத்தில் சிபிராஜ், சத்யராஜ், பிந்து மாதவி, கருணாகரன் மற்றும் பலர் நடித்த இந்தப் படமும் வழக்கமான பேய்ப் படம்தான். ஆனால், பேயைக் கண்டு பயப்படாத படமாக நகைச்சுவையை அதிகம் கலந்து கொடுத்ததால் இந்தப் படம் வெற்றி பெற்றது. 'பர்மா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் தரணிதரனுக்கு அந்தப் படம் கொடுக்காத வெற்றியை 'ஜாக்சன் துரை' கொடுத்துவிட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் 'தெறி' 100வது நாள், 'கபாலி' வெளியீட்டு நாள், இன்று இரண்டு படங்களின் 25வது நாள் என இந்த வாரம் தமிழ் சினிமா கொஞ்சம் மகிழ்ச்சியாகவே முடிகிறது.