ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சன்னி லியோன் மீது டில்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கபடி போட்டி தொடரின் துவக்க விழாவில் சன்னி லியோன், தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறப்பட்டுள்ளது. சிந்த் என்ற வார்த்தைக்கு பதிலாக சிந்து என சன்னி லியோன் பாடியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சன்னி லியோன் துபாயில் இருந்து வருகிறார். இந்த புகார் பற்றி சன்னி லியோனிடமே கேட்டோம். அதற்கு அவர், இது என்னை மிகவும் வேதனைபட வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக நான் கடினமாக உழைத்தேன். எந்த நிகழ்ச்சியை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயத்திற்குமே எப்போதும் எதிர்ப்பு இருக்கும் என தெரியும். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னை வெறுப்பவர்கள் சுற்றிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் செயல்களை உங்களால் தடுக்க முடியாது. எனது அணியினரும், எனது குடும்பத்தாரும் என்னுடன் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. என்னை வெறுக்கும் அத்தகைய நபர்களால் இப்போது வரை என்னை வீழ்த்த முடியவில்லை. அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.