ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. உலக அளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்த்திரையுலகைச்சேர்ந்த பெரும்பாலானோர் முதல் நாளே கபாலியை பார்த்து ரசித்து விட்டனர். அதையடுத்து தங்களது மேலான கருத்தினையும் இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்நீச்சல், அரிமாநம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ள பிரியாஆனந்த் இன்னும் கபாலி படத்தை பார்க்கவில்லையாம். அவரது நட்பு வட்டாரத்தினர் கபாலி டிக்கெட் உள்ளது என்று அவரை அழைத்தபோதும் அவரால் படம் பார்க்க முடியவில்லையாம். அதனால் அவருக்கு பெரிய ஏமாற்றமாகி விட்டதாம். அதுபற்றி தனது டுவிட்டரில் செய்தி வெளிப்படுத்தியிருக்கிறார் பிரியாஆனந்த்.
அவர் கூறியிருப்பதாவது, நான் ரஜினி சாரின் பெரிய ரசிகை. அதனால் எல்லோரையும் போலவே கபாலி படத்தை பார்க்க நானும் ஆவலாக இருந்தேன். ஆனால் தற்போது கெளதம் கார்த்தியுடன் நான் நடித்து வரும் முத்துராமலிங்கம் படப்பிடிப்பு கேரளாவில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக என்னால் கபாலி படத்தை பார்க்க இயலவில்லை. அது எனக்கு மனதளவில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.