ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷ்ணு, நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க எழில் இயக்கத்தில் வெளியான படம் வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன். விஷ்ணு விஷால் மற்றும் எழில் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. சமீபத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அது மட்டுமல்ல, படத்தைத் தயாரித்தவர்களுக்கும் படத்தை வாங்கி வெளியிட்டவர்களுக்கும் நல்ல லாபம் சம்பாதித்து கொடுத்தது.
வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினிடம் கதை சொன்னார் இயக்குநர் எழில். அந்தக்கதை உதயநிதிக்கு பிடித்தது. ஆனால் சுசீத்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்ததால் எழில் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். சுசீந்திரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தநிலையில், உதயநிதி சொன்ன பல விஷயங்களை ஏற்க மறுத்துவிட்டார் சுசீந்திரன்.
இது தொடர்பாக உதயநிதிக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உதயநிதி, சுசீந்திரன் படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் என்றும், அவருக்காக ஒதுக்கிய கால்ஷீட் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக எழிலை அழைத்து அவரது படத்துக்கு கால்ஷீட் கொடுத்தவிட்டார் உதயநிதி என்றும் கூறப்படுகிறது.