ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'காக்கா முட்டை' மணிகண்டன், குற்றமே தண்டனை வெளிவருதற்கு முன்பே அடுத்த படமான 'ஆண்டவன் கட்டளை'யையும் எடுத்து முடித்து விட்டார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் மதுரை அன்புசெழியன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ரித்திகாசிங், பூஜா தேவரியா, நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே இசை அமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதுவும் 'காக்கா முட்டை' மாதிரியான நிஜ வாழ்க்கை கதை. எந்த சினிமா பூச்சம் இல்லாத யதார்த்தமான கதை. எழுத்தாளர் அருள் செழியன் எழுதிய ஒரு குறுநாவலின் தழுவதல் தான் படம். ஒரு அரசு பணிக்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும்போது அதில் ஒரு விஷயத்தை தவறாக குறிப்பிட்டுவிட்டால் பின்னாளில் அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியாக சொல்கிற படம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதிலிருந்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது வரை யாருமே சொந்தமாக செய்வதில்லை ஒரு புரோக்கரை வைத்துதான் செய்கிறோம். அந்த புரோக்கர் தவறு செய்தால் பாதிக்கப்படுவது நாம்தான் என்கிற உண்மையை சொல்கிற படம்.