ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலுவுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் காமெடியன் அந்தஸ்தை பிடித்தவர் சந்தானம். வளர்ந்து நின்ற ஹீரோக்கள், வளர்ந்து வந்த ஹீரோக்கள் என பலரும் அவரது காமெடியை வைத்தே தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வந்தனர். அந்த அளவுக்கு சரவெடிகளாக தனது தாறுமாறு காமெடிகளை அள்ளி வீசி வந்தார் சந்தானம். ஆனால், தன்னை வைத்தே சில ஹீரோக்கள் பேலன்ஸ் பண்ணி நிற்பதை பார்த்த சந்தானத்துக்கு, ஏன் நாமளே ஹீரோவாகக்கூடாது என்ற ஆசை ஏற்பட, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசி ஒரு ட்ரெய்ல் பார்த்தார். அது ஒர்க்அவுட் ஆனது. அதனால் அடுத்தடுத்து சில படங்களில் நாயகனாக நடித்து தில்லுக்குத் துட்டு படத்தில் பெரிய கமர்சியல் வட்டத்திற்குள் வந்து விட்டார் சந்தானம்.
விளைவு, முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அவர். ஆனால், இவர்கள் இரண்டு பேருமே வெவ்வேறு ட்ராக்கில் பயணிப்பவர்களாச்சே. இந்த கூட்டணி எப்படி சாத்தியமாகும் என்கிற சந்தேக கேள்விகளும் எழாமல் இல்லை. ஆனால் இந்த படத்தில் தனது காமெடி ட்ராக்கில் இருந்து விடுபட்டு ஒரு சீரியஸ் கதையில்தான் நடிக்கிறாராம் சந்தானாம். சந்தானத்தினால் சிரிக்க வைக்க மட்டுமின்றி, சிந்திக்க வைக்கவும் முடியும் என்கிற ரீதியில் ஒரு கதை ரெடி பண்ணியிருக்கிறாராம் செல்வராகவன். அது சந்தானத்தை மிகவும் கவர்ந்து விட்டதாம். அதனால், முதன்முறையாக சீரியஸ் கெட்டப்பில் தனது சின்சியர் பர்பாமென்ஸை கொடுக்கப்போகிறாராம் சந்தானம்.