ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் ரா ரா, சந்தமாமா படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அதன் பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பரபரப்பானர். “எனது வறுமையால் இந்த தொழிலுக்கு வர நேர்ந்தது” என்ற அவர் அளித்த பேட்டியால் நெகிழ்ந்த பிரபல இந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது படத்தில் அவரை நடிக்க வைக்க இருப்பதாக கூறினார்.
விபச்சார வழக்கிலிருந்து விடுபட்டதும் இது தொடர்பாக அனுஷராக் காஷ்யப்பை சந்தித்தார் ஸ்வேதா. அப்போது அவரிடம் உதவி இயக்குனராக இருந்த ரோகித் மிட்டல் என்பவருடன் ஸ்வேதாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது அதுவே காதலாகிவிட்டதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்வேதா தற்போது தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.