ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தேதியில் ஓய்வு இல்லாமல் அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவது தனுஷ்தான். தனுஷ் நடித்து வரும் படங்களில் பிரபுசாலமன் இயக்கியுள்ள 'தொடரி' படம் முடிவடைந்து சில மாதங்களாகின்றன. கபாலி ரிலீஸுக்குப் பிறகு வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் தொடரி ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர தயாராக உள்ளது.
கௌதம் மேனனின் இயக்கத்தில் நடித்து வரும் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. என்றாலும் இந்தப் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படம் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. அதை ரிலீஸ் பண்ணாமல் கௌதம் மேனனால் எனை நோக்கிப் பாயும் தோட்டாவை ரிலீஸ் பண்ண முடியாதநிலையில் சிக்கலில் உள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.துரைசெந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படமும் தற்போது வெளியிட தயார்நிலையில் இருக்கிறது.
பொலிடிக்கல் த்ரில்லராக உருவாகும் 'கொடி' படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அரசியல்வாதியான அண்ணனுக்கு ஜோடியாக த்ரிஷாவும், தம்பிக்கு ஜோடியாக 'பிரேமம்' புகழ் அனுபமா பரமேஸ்வரனும் நடிக்கிறார்கள். தற்போது, கொடி படத்தின் கதை எதை அடிப்படையாகக் கொண்டது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு கிராமத்தில் வளர்க்கப்படும் ஆபத்தான செடிகளால் அந்த ஏரியாவாசிகள் எத்தகைய பாதிப்பகளைச் சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப் படங்கள் தவிர, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார் தனுஷ். இறைவி படம் படு தோல்வியடைந்த நிலையிலும் கார்த்திக்சுப்பாராஜ் இயக்கவிருக்கும் படத்திற்கான திரைக்கதை பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்க உள்ள 'மாரி 2' படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் பிஸியாக நடைபெற்று வருகின்றன.