ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் எதிர்பார்த்த, தமிழ்த் திரையுலக ரசிகர்கள் எதிர்பார்த்த அவர்களை விட பத்திரிகையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. பல வதந்திகளுக்கும், கிசுகிசுக்களுக்கும் ஒரு சரியான முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்கியவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் தமிழ், தெலுங்கில் இயக்கி வரும் 'முடிஞ்சா இவன புடி' படத்தின் இசையை தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் மூவரும் ஒரு மேடையிலிருந்து வெளியிட்டதை காமிராக்களின் வெளிச்சமும், பல நூறு கண்களும் ஆச்சரியத்துடன் பதிய வைத்துக் கொண்டன.
சிவகார்த்திகேயன் பேச எழுந்து வரும் அந்த சில வினாடிகளில் 'ரஜினி முருகன்' படப் பாடல் ஒலித்தது. சிவகார்த்திகேயன் பேசும் போது விஜய்சேதுபதியை தன்னை விட மூத்தவர் எனப் பேசி விஜய் சேதுபதியை விட தான் சிறியவன் என்பதை ஜாலியாகக் குறிப்பிட்டுப் பேசினார். 'தனுஷ் சாரை நீண்ட நாள் கழித்து இப்போதுதான் பார்க்கிறேன்' என அவர் பேசியது அவர்களைப் பற்றி வந்த கிசுகிசுக்களை உண்மையாக்குவதாக இருந்தது. உட்கார்ந்திருக்கும் போது கூட சிவகார்த்திகேயன் தனன்னுடைய வலப் பக்கம் அமர்ந்திருந்த விஜய் சேதுபதியுடன்தான் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தார். இடது பக்கம் அமர்ந்திருந்த தனுஷிடம் அதிகம் பேசவில்லை. அது மரியாதையாகக் கூட இருந்திருக்கலாம்.
விஜய் சேதுபதி பேசு எழுந்து வரும் போது அவர் படப் பாடல் ஒன்று ஒலிக்க...உடனே...கையசைத்து அதை நிறுத்தும்படி சைகை செய்தார். பாடலும் உடனே நின்றது...எதற்கு இதெல்லாம்...என அந்த சின்ன பந்தாவைக் கூட அவர் ஏற்கத் தயாராக இல்லை.
தனுஷ் பேசும் போது, “விஜய்சேதுபதி கூட நடிச்சிட்டேன், நடிக்கப் போறேன்...சிவகார்த்திகேயன் கூட நடிச்சிட்டேன். இதுவரைக்கும் நான் யார் கூடவும் நடிக்க ஆசைப்பட்டதில்லை. ஆனால், சுதீப் சார் கூட நடிக்கணும்னு ஆசைப்படறேன். நித்யா மேனன் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்றார்.
கடைசியாகப் பேசிய சுதீப் நன்றாகவே தமிழ் பேசுவார், இருந்தாலும் இன்றைய நிகழ்ச்சியில் ஏனோ ஆங்கிலத்தில் பேசினார். மேடையத் தயக்கமா எனத் தெரியவில்லை. ஹீரோயின்கள் தமிழ் பேசவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்குப் பிரச்சனையில்லை. ஹீரோக்கள் தமிழ் பேசினால்தான் அவர்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பதை அவர் புரிந்து கொண்டார் சரி.
தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் இன்றைய முக்கிய மூன்று ஹீரோக்களை இயக்குனர் ரவிக்குமார் ஒரே மேடையில 'மூணு பேரை பிடிச்சி' வச்சிட்டாரே...' என்ற பேச்சுடன் 'முடிஞ்சா இவன புடி' இசை வெளியீடு நடந்து முடிந்தது.
நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி, நடிகர்கள் சதீஷ், சாய் ரவி, ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம், எடிட்டர் பிரவீன் ஆண்டனி, இயக்குனர்கள் பி.வாசு, பாக்யராஜ், சேரன் மற்றும் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.