ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யின் ஒவ்வொரு படத்திலும் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஒரு சிலராவது தவறாமல் இடம்பெற்று விடுகிறார்கள். அட்லீ இயக்கிய 'தெறி' படத்தில் கேரளாவில் விஜய்யின் பிளாஸ்பேக்கில் வருபவராக பிரதீப் கோட்டயம் என்கிற நகைச்சுவை நடிகரும் வில்லன்களின் கையாட்களில் ஒருவராக மலையாள திரையுலகை சேர்ந்த பினீஸ் பாஸ்டினும், நடித்திருந்தனர். இப்போது பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத அவரது 60வது படத்தில் மலையாள குணச்சித்திர நடிகரான விஜயராகவன் என்பவர் நடித்து வருகிறார்..
தமிழ் சினிமாவில் நாசர், ஜெயபிரகாஷ் போல மலையாள படங்களில் தவிர்க்க முடியாத நடிகர் இவர்.. சமீபத்தில் வெளியான 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என்கிற படத்தில் கூட அமலாபாலின் தந்தையாக நடித்தவர் இவர்தான். கடந்த 26 வருடங்களுக்கு முன் தமிழில் பாசில் இயக்கிய 'அரங்கேற்ற வேளை' படத்தில் கொள்ளைக்கூட்ட தலைவனாக நடித்த இவரை உங்களில் சிலர் பார்த்திருக்க கூடும். அந்தவகையில் இவருக்கு தமிழில் இது இரண்டாவது படம்.. இந்தப்படத்தில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனின் தந்தையாக நடித்துள்ளாராம் விஜயராகவன்.. அந்த மாணவன் மர்மமான முறையில் இறக்க, விஜய் அந்த மர்மத்தை கண்டுபிடித்து துப்பு துலக்குபவராக நடிக்கிறாராம்.