ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறவர் சம்பத்ராம். 'கபாலி' படத்தில் ரஜினியின் நண்பராக நடித்துள்ளார். இதுற்றி அவர் கூறியிருப்பதாவது:
நான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். 200 படங்கள் வரை நடித்திருப்பேன். ஒரு படத்திலாவது ரஜியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சியமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. மெட்ராஸ் படம் வெளிவந்த பிறகு இயக்குனர் ரஞ்சித்தை சந்தித்து அண்ணே நான் மெட்ராஸிலேயே பிறந்து வளர்ந்தவன். மெட்ராஸ் படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் போயிவிட்டதே என்று வருந்தினேன். அதை மனதில் வைத்து 'கபாலி' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதுவும் ரஜினியின் நண்பராக.
நான் இதுவரை வெளிநாட்டுக்கு சென்றதில்லை. முதன் முறையாக மலேசியாவுக்குச் சென்றேன். ரஜினியோடு நடித்த ஒவ்வொரு நிமிடமும் மறக்க முடியாதது. என் இரு தோள்களையும் தன் கையால் பிடித்துக் கொண்டு “உடம்பை நல்லா வச்சிருக்கீங்க என்ன செய்றீங்க”ன்னு கேட்டார். நான் புட்பால் பிளேயர் இன்னும் விளையாடிக்கிட்டிருக்கேன் என்றேன். “குட் கடைசி வரை விளையாடிக்கிட்டே இருங்க” என்றார்.
படப்பிடிப்பு முடிந்ததும் “சினிமால மட்டுமில்ல நிஜத்திலும் நாம பிரண்ட் தான். அடிக்கடி வீட்டுப் பக்கம் வந்து போங்க” என்றார். அவர் அன்புக்கு முன்னால் நாமெல்லாம் ஒரு தூசு என்பதை புரிந்து கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய ரஞ்சித்துக்கு வாழ்நாள் முழுக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்கிறார் சம்பத்ராம்.