ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள படம் 'முடிஞ்சா இவன புடி'. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் 'நான் ஈ'சுதீப் ஹீரோ. நித்யா மேனன் ஹீரோயின். ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். ராம்பாபு தயாரித்துள்ளார். லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தமிழ்நாட்டு உரிமத்தை பெற்றுள்ளார்.
இந்தப் படம் முடிந்து சில மாதங்கள் ஆனது. கன்னடத்தில் உடனே விற்பனையான படம் தமிழில் விற்பனையாகாமல் இருந்தது. அதனால் வெளியீடும் தள்ளிக்கொண்டே போனது. தற்போது ராக்லைன் வெங்கடேஷ் வாங்கி விட்டதால் வெளியீட்டை துரிதப்படுத்தி உள்ளனர். அதற்கு முன்னதாக பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த கே.எஸ்.ரவிகுமார் விரும்பினார். ரஜினி, கமல் இருவரில் ஒருவரை அழைக்க முடிவு செய்தார். ஆனால் ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பாததாலும், கமல் திடீர் விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும் தற்போது இளம் நடிகர்களை வைத்து பாடல்களை வெளியிடுகிறார்.
நாளை சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஓன்றில் நடக்கும் பாடல் வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் தலைமை தாங்குகிறார். விஜய்சேதுபதி பாடல்களை வெளியிட சிவகார்த்திகேயன் பெற்றுக் கொள்கிறார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.