ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்குத் திரையுலகிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை சாவித்ரி. எம்ஜிஆர், சிவாஜிகணேசன் திரையுலகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலேயே தன் நடிப்பைப் பற்றி அதிகம் பேச வைத்தவர். அவர் சிறப்பாக நடித்த படங்கள் என்று எதைச் சொல்ல...ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதத்தில் சிறந்த படங்கள்தான். கொஞ்சம் குண்டான தோற்றத்திலும், அழகான கண்களுடனும், தெளிவான பேச்சிலும் அன்றைய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இன்றுவரை குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படும் ஹீரோயின்கள் சாவித்ரி மாதிரி ஆக வேண்டும் என்றுதான் சொல்வார்கள். அவருக்குப் பிறகு அவருடைய இடத்தை இதுவரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட நடிகையாக ஜொலித்தவர் சாவித்ரி. அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒளி வீசினாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்தவர். நடிகர் ஜெமினி கணேசனைக் காதல் திருமணம் புரிந்து கொண்டார். கடைசி காலத்தில் நோய்வாய்ப்பட்டு 45 வயதிலேயே இறந்து போனார். அவருடைய வாழ்க்கையை நாக் அஸ்வின் என்ற இளம் இயக்குனர் ஒருவர் தெலுங்கில் படமாக எடுக்க முயற்சித்து வருகிறார். இதற்காக அன்றைய கால கட்ட புத்தகங்கள் பலவற்றைப் படித்தும், சாவித்ரிக்குப் பழக்கமானவர்களிடமும் அவரைப் பற்றிய பல தகவல்களைச் சேர்த்து கதையை உருவாக்கி வருகிறார்.
சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சோனாக்ஷி சின்ஹா, வித்யா பாலன், அனுஷ்கா ஆகியோரில் யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்து வருகிறாராம். சாவித்ரியின் நடிப்பை யாராலும் மற்றுமொரு முறை திரையில் பிரதிபலிக்க வைக்க முடியாது என்பதே உண்மை.