ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன் 'சபாஷ் நாயுடு'வின் முதல்கட்ட படபிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு சமீபத்தில் தான் இந்தியா திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் தன் அலுவலகத்தில் உள்ள படிக்கட்டில் தவறி விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு ஆபரேஷன் நடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்ப உள்ளார், பூரண குணம் பெற 6 வாரங்கள் வரை ஆகலாம் என்று அவரது சகோதரர் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக ஒரு ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கமல் மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார். அதன் விபரம்....
என் மீது எப்போதும் அன்பு கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் முதலில் நன்றி. எனக்கு ஒரு விபத்தோ, ஆபத்தோ என்றால் கூட கேலிகள் கூத்துகள் பலவற்றுடன் எனக்காக வீறு கொண்டு எழுந்து எனக்கு முன்னால் இவர்கள் காட்டும் அன்பு பார்த்து நான் வியக்குகிறேன். இத்தகைய அன்புக்கு பாத்திரமாக நான் ஒரு தவமும் செய்யவில்லை. பதிலுக்கு அன்பும், என் கலையும், அதற்காக நான் ஏற்ற பல பாத்திரமுங்களும் தான்.
எனக்கு நடக்கும் நல்லதோ கெட்டதோ உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். வெற்றிகளும், விபத்துகளும் என் கதையில் விசித்திரம் அல்ல, சில இடறுகளை கடந்து பல பாடங்களை கற்றவன். ஆனால் பல விபத்துகள் கடந்தும் பாடம் கற்க மறந்தேன் என்பதற்கு இந்த விபத்தே சான்று. ஆயிரம் வேலைகளும், ஆர்ப்பரிக்கும் ரசிகர்களும் எனக்காக காத்திருக்கையில் இந்த விபத்து நேர்ந்திருக்க வேண்டாம் தான். ஆனால் நல்ல மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும், என் சிறு குடும்பமும் உடன் இருக்க எனக்கு ஒரு குறையும் இன்றி நலம் பெற்று வருவேன்.
எப்படியிருக்கீங்க என்று கேட்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என்று கேட்கும் என் தம்பிகளுக்கும், அப்பன்களுக்கும், தலைவனுக்கு என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் பதில் சொல்ல நலம் பெற்று திரும்புவேன். எழுந்து அமர்ந்து இந்த கடிதத்தை எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லி வணங்குவேன். அன்பிற்கும், பாசத்திற்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லா உங்கள் அன்பு கமல்ஹாசன் 16 ஜூலை 2016.
இவ்வாறு கமல் பேசியிருக்கிறார்.