ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. முதலில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க நடிகை சமந்தாவை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால், அதன் பின் அவர் இந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்ற செய்தி வெளியாகியது.
இந்தப் படத்தை மூன்று பாகங்களாக எடுக்கப் போவதாகவும், சமந்தா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதால் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார் என்றும் சொன்னார்கள். தற்போது நாயகியாக நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் செய்திகள் வந்தன. நாயகி விஷயமே இன்னும் முடிவடையாத நிலையில் படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைப்பது என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.
முதலில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ஜீவாவைக் கேட்டார்கள். ஆனால், அவர் வில்லனாக நடிக்க மறுத்துவிட்டார். வில்லன் என்று சொன்னாலும் அந்தக் கதாபாத்திரம் தனுஷுக்கு இணையாக வரும் கதாபாத்திரம் என்கிறார்கள். அதனால், அதில் நடிக்க தற்போது விஜய்சேதுபதியைத் தொடர்பு கொண்டுள்ளார்கள், அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால், விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.
வட சென்னை படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிப்பது மகிழ்ச்சி, கெளரவத் தோற்றங்கள் நீட்டிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தைத் தயாரித்தது தனுஷ்தான் என்பதால் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க சம்மதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
சீக்கிரமே நாயகி யார் என்பதையும் வில்லன் யார் என்பதையும் படக்குழுவினர் முடிவு செய்துவிட வேண்டும் என்ற மும்முரத்தில் இருக்கிறார்களாம்.