ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சில திரைப்படங்களின் கிளைமாக்ஸ் ரசிகனையும், மக்களையும் உலுக்கி விடும். 'சேது' படத்தில் விக்ரமின் பரிதாப முடிவு. 'அரங்கேற்றம்' படத்தில் பிரமிளாவின் முடிவு, 'சிறை' படத்தில் லட்சுமியின் முடிவு. 'மரோசரித்திரா'வில் கமல், ரதி முடிவு என நிறைய பட்டியலிடலாம். பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கார்த்தி பூனூலையும், ராதா சிலுவையையும் அறுத்து எரியும் கிளைமாக்ஸ் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இது ஒன்றும் புதிதில்லை.
இதுபோன்ற ஒரு கிளைமாக்சை 77 ஆண்டுகளுக்கு முன்பே வைத்துவிட்டார் கே.சுப்ரமணியம். தமிழ் சினிமாவின் முதல் இயக்குனர். 1938ம் ஆண்டு இவர் இயக்கிய 'சேவா சதனம்' படத்தில்தான் இந்த புரட்சியை அவர் செய்தார். அக்கால குல வழக்கப்பட்டி வயதான புரோகிதர் ஒருவருக்கு ஒரு இளம் பெண்ணை இரண்டாம் தாராமாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அந்தப் பெண் படும் உளவியல் ரீதியான துன்பங்களை பற்றிய படம் அது.
அந்தக்காலத்தில் நிலவிய மூடப்பழக்க வழக்கங்களை சாடிய படம். படத்தை இயக்கிய கே.சுப்ரமணியமும் ஒரு பிராமணர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். படத்தின் கிளைமாக்சில் மூட நம்பிக்கைகள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக படத்தின் நாயகரான வயதான புரோகிதர் தன் பூனூலை அறுத்து எரிந்து விடுவார். இந்த புரட்சிகரமான கிளைமாக்ஸ் அப்போது பரபரப்பை ஏற்படுத்தினாலும் அது நியாயமானதாகவே மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வயதான புரோகிதராக நாடக நடிகரான எப்.ஜி.நடேச அய்யர் நடித்திருந்தார். அவரது இளம் மனைவியாக கர்நாட இசைப்பாடகி 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்திருந்தார். இந்தப் படத்தில் சீதா லட்சுமி என்ற நடிகை தன் தலையை மொட்டை அடித்து பைத்தியமாக நடித்தார். ஒரு நடிகை படத்துக்காக மொட்டை அடித்துக் கொண்ட முதல் நிகழ்வும் இதுதான்.