சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'36 வயதினிலே' படத்திற்குப் பிறகு ஜோதிகா நடிக்கும் படம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இது பற்றி சூர்யா அவருடைய டிவிட்டரில் தெரிவித்துள்ளார். “சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் ஜோ அவருடைய அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்...எப்போதும் போல் உங்களது வாழ்த்துகள் வேண்டும், உற்சாகமான கணவன்” என மகிழ்ச்சி பொங்க டிவீட்டியுள்ளார்.
சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்தார் ஜோதிகா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் அவர்கள் வளர்ந்ததும் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பி நாயகிக்கு முக்கியத்தும் வாய்ந்த '36 வயதினிலே' படம் மூலம் கடந்த வருடம் மீண்டும் நடிக்க வந்தார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிக்க முடிவெடுத்தார். 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடிக்கவே அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தார். அதன் படப்பிடித்தான் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆனாலும், தேசிய விருது பட இயக்குனர் பெயரைக் கூட சூர்யா தன்னுடைய டிவீட்டில் குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை.