ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமுருகன் இயக்கிய 'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. விஜயால் 'சின்ன அசின்' என்று பாராட்டப்பட்டவர். அதற்கு பிறகு பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் எந்த படமும் அவருக்கு நல்ல இடத்தை தரவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் தற்போது 'சவரக்கத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் கதையை அவரது உதவியாளர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குகிறார். ஆரல் குரோலி இசை அமைக்கிறார். மிஷ்கின் தயாரித்து முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இது ஒரு சவரத் தொழிலாளியின் வாழ்க்கையை பற்றிய கதை. இயக்குனர் ராம் சவரத் தொழிலாளியாகவும், பூர்ணா அவரது மனைவியாகவும் நடிக்கிறார். பூர்ணா கர்ப்பமாக இருக்கும்போது நடக்கும் சம்பவங்களை கொண்ட திரில்லர் கதை. மிஷ்கின் வில்லன். இரண்டு ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் படம் என்பதால் இந்தப் படம் தனக்கான இடத்தை பெற்றுத் தரும் என்று நம்புகிறார் பூர்ணா.
“பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்த கதை. இப்படி ஒரு கேரக்டர் எனக்கு திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம் தான். என் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். ராம் சாரும், மிஷ்கின் சாரும் சிறந்த இயக்குனர்கள். அவர்கள் என் நடிப்பை பாராட்டியபோது சந்தோஷமாக இருந்தது. சிலர் விருது கிடைக்கும் என்றார்கள். நான் அந்த அளவிற்கு ஆசைப்படவில்லை. தமிழில் நல்ல இடம் கிடைத்தால் போதும்” என்கிறார் பூர்ணா.