மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல் ஆசிரியர்கள் இருந்தாலும் கண்ணதாசன், வாலி ஆகியோருக்கு பிறகு அனைவராலும் கவரப்பட்டவர் வைரமுத்து. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் வைரமுத்துவிற்கு இன்று(ஜூலை 13-ம் தேதி) 63வது பிறந்தநாள். வைரமுத்துவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கவிஞர்கள் திருநாள் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு மதுரையில் கவிஞர்கள் திருவிழா நடைபெற இருக்கிறது. வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப்பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ...
தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ராமசாமி தேவருக்கும், அங்கம்மாளுக்கும் மகனாக ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டு பிறந்தார். தன்னுடைய இளமைப் காலத்தில் அண்ணா, பெரியார், கருணாநிதி ஆகியோரின் தமிழால் கவரப்பட்டு, பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசன் அவர்களின் கவிதை நடையால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் தனது 12-வது வயதிலேயே கவிதை எழுத ஊக்குவித்தது. தொடர்ந்து 14-வது வயதிலேயே, தமிழ் செய்யுளின் யாப்பின் சொல் இலக்கண விதிகளைக் கொண்டு கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதன்பின் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் கவிதை எழுத ஆரம்பித்தார்.
இயக்குநர் பாரதிராஜாவால் 1978 ஆம் ஆண்டு, நிழல்கள் படத்தில் ‛இது ஒரு பொன் மாலைப் பொழுது... என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அப்போது தொடங்கிய வைரமுத்துவின் திரையுலக பயணம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்போதும் தொடர்கிறது. சுமார் 6000 பாடல்கள் எழுதியிருக்கும் வைரமுத்து ஆறு முறை தேசிய விருதும், கலைமாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும், பத்மபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.
பாடல்களோடு நிறுத்திக்கொள்ளாமல், பல்வேறு நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், நூல்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். அவரது படைப்புகளில், வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், வானம் தொட்டுவிடும், தூரம்தான், கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
வைரமுத்து எழுதிய பாடல்கள் ஏராளம், அதில் சிலவற்றை இங்கே காண்போம்...
இது ஒரு பொன் மாலைப் பொழுது.... : நிழல்கள்
நீ தானே எந்தன் பொன் வசந்தம்... : நினைவெல்லாம் நித்யா
என்ன சத்தம் இந்த நேரம்.... புன்னகை மன்னன்
கண்ணுக்குள் நூறு நிலவு... : வேதம் புதிது
என் தாயின் மீது ஆணை.... : மிஸ்டர் பாரத்
பூங்காற்று திரும்புமா.... : முதல் மரியாதை
தென்கிழக்கு சீமையில... கிழக்கு சீமையிலே
அச்சம் இல்லை இனி... : இந்திரா
பச்சை கிளிகள்... : இந்தியன்
மார்கழி பூவே.... மே மாதம்
உன்னை பார்த்த பின்பு... : காதல் மன்னன்
சின்ன சின்ன ஆசை... : ரோஜா
போறாளே பொன்னுத்தாயி... : கருத்தம்மா
அன்பே அன்பே கொல்லாதே... : ஜீன்ஸ்
கை தட்டி தட்டி அழைத்தாளே... : ஜோடி
அவள் வருவாளா... : நேருக்கு நேர்
ஐ லவ் யூ லவ் யூ சொன்னாளே... : உள்ளத்தை அள்ளித்தா
முதல் முறை கிள்ளி பார்த்தேன்... : சங்கமம்
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்... : தாஜ்மஹால்
அன்பென்ற மழையிலே.... : மின்சார கனவு
அஞ்சலி அஞ்சலி... : டூயட்
சந்திரனை தொட்டது யாரு... : ரட்சகன்
அழகான ராட்சஸியே... : முதல்வன்
ஒரு தெய்வம் தந்த பூவே... கன்னத்தில் முத்தமிட்டால்
எங்கே எனது கவிதை... : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
யார் யார் சிவம்... : அன்பே சிவம்
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே... : தென்மேற்கு பருவக்காற்று
இரும்பிலே ஓர் இருதயம்... : எந்திரன்
வைரமுத்துவின் படைப்புகள் தொடர வாழ்த்துவோம்...! வாசகர்களாகிய நீங்களும் வைரமுத்துவிற்கு இங்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கலாம்!