ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தற்போது ஜெயம் ரவியுடன் போகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர் ஹன்சிகா. தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை தொடர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஹன்சிகாவை பற்றி வீடியோ ஒன்று வெளியாகி பலரின் பாராட்டுதலுக்கு உள்ளாகி உள்ளது. அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது...? ஹன்சிகா, சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு போர்வை, உடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை அவரே நேரடியாக சென்று வழங்கியிருக்கிறார். ஹன்சிகாவின் இந்த சேவையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.