ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் 'ரீ பிக்அப்' என்ற வரிசை படங்கள் சில உண்-டு. இளையராஜா முதன் முதலாக இசை அமைத்த 'அன்னக்கிளி' படம் முதல் வாரம் தியேட்டரில் காற்றுவாங்கி அதன் பிறகு பாடல்களால் பாப்புலராகி வெள்ளி விழா கொண்டாடியது. டி.ராஜேந்தரின் 'ஒரு தலை ராகம்'. “சின்ன பசங்ச கூத்தடிக்கிறாங்க” என்ற விமர்சனத்தோடு தியேட்டரை விட்டு வெளியேறியபோது டி.ராஜேந்தரின் பாடல்களால் படம் வெள்ளிவிழா கொண்டாடியது. பாலாவின் 'சேது'வை வாங்க ஆளில்லை. முதலில் குறைவான தியேட்டர்களில் திரையிடப்பட்டு பின்பு பரவலான பாராட்டுக்கு பிறகு தியேட்டர்கள் அதிகப்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. மிஷ்கின் இயக்கிய 'சித்திரம் பேசுதடி' தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை வாங்கி விளம்பரப்படுத்தி திரையிட்டபோது வெற்றி பெற்றது. இப்படி இன்னும் சில 'ரீ பிக்கப்' படங்கள் உண்டு.
தமிழ் சினிமாவின் முதல் 'ரீ பிக்கப்' படம் 'கச்ச தேவயானி'. காந்த கண்ணழகி டி.ஆர்.ராஜகுமாரி நடித்த முதல் படம். கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். கொத்தமங்கலம் சீனு ராஜகுமாரி ஜோடியாக நடித்தார். 1941ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் முதல் ஒரு வாரம் வாரம்கூட தாக்குபிடிக்க முடியாமல் தவித்தது. வேலைக்காரியாக இருந்து நடிகையான ராஜகுமாரி மீண்டும் நாம் வேலைக்காரிதான் என்ற கலங்கி நின்றார். அதன் பிறகுதான் மவுத்டாக் பரவியது. “மச்ச தேவயானியா ஒரு பொண்ணு நடிச்சிருக்கு. என்ன அழகு தெரியுமா? தேவதை மாதிரி இருக்கா. கதையை விடு அந்த பொண்ணுக்காக படத்தை பாரு” என மவுத்டாக் ஆனது. மறுவாரம் முதல் தியேட்டரில் யூத்துகள் குவிந்தார்கள். 25 வாரங்கள் படத்தை ஓட வைத்தார்கள். அன்று முதல் நட்சத்திர நடிகையானார் டி.ஆர்.ராஜகுமாரி. படம் எப்படி இருந்தாலும் ஒரு நடிகைக்காக ரசிகர்கள் தியேட்டருக்க்கு படையெடுத்தது டி.ஆர்.ராஜகுமாரிக்காகத்தான்.