ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தபோதும் இப்படித்தான் பலரும் நினைத்தனர். ஆனால் அவரரோ இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதோடு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படம் ஓடவில்லை. 'லொள்ளு சபா' புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளியாகி உள்ள 'தில்லுக்கு துட்டு' படமோ, அவர் கதாநாயகனாக நடித்த படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றுள்ள. இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்திருகிறது.
ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாக சற்று நெகட்டிவ்வான கருத்துக்களை சந்தித்து வருகிறது. ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் சந்தானத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக தில்லுக்கு துட்டு படத்துக்கு செம வசூல் கிடைத்திருக்கிறது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம், வேறு பெரிய படங்கள் எதுவும் வராதது போன்ற காரணங்களே 'தில்லுக்கு துட்டு' படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்க காரணமாக சொல்லப்படுகிறது.