ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட சகலகலா வித்தகரான சமுத்திரகனி, நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்திருக்கும் படம் ‛‛அப்பா''. சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நெய்வேலியில் அப்பா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சமுத்திரகனி உள்ளிட்ட அப்பா படக்குழுவினர் சென்றனர். அப்போது தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் சமுத்திரனி உரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமுத்திரகனி கூறியதாவது...
நெய்வேலி எனக்கு மறக்க முடியாத ஊர். எனது அடுத்தப்படத்தை நெய்வேலி பகுதியில் எடுக்க உள்ளேன். அப்பா படம் மிகப்பெரிய வெற்றி பெறாது, வியாபாரம் ஆகாது என்றனர். ரசிகர்கள் மீது உள்ள நம்பிக்கையில் அப்பா எடுத்து தயாரித்தேன். நல்ல விஷயங்களை எப்போதும் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்பது அப்பா படத்திற்கும் உண்மையாகியுள்ளது. அதற்காக ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அப்பா படம் வெளியான இரண்ட நாட்களில் திருட்டு விசிடி வெளியாகிவிட்டது. சினிமாக்காரர்கள் எவ்வளவு முயற்சித்தும் திருட்டு விசிடியை ஒழிக்க முடியவில்லை. யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் எடுத்தால் தான் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்றார்.