ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வளர்ந்து வரும் தொகுப்பாளினி சுமையா. 'சினிமா ஸ்பெஷல்', 'பிரபலங்கள் சந்திப்பு', 'காதலுக்காக' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். “என்னதான் திறமையானவர்களாக இருந்தாலும் நட்சத்திர தொகுப்பாளிகளுக்குத்தான் மரியாதை கிடைக்கிறது” என்கிறார் சுமையா. அவர் மேலும் கூறியிருப்பதாவது...
தொகுப்பாளினி வேலையை விரும்பித்தான் தேர்வு செய்தேன். காலையில் வேலைக்கு போனால் இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் வீட்டில் போட்டிருக்கும் ஒரே கண்டிஷன். இதனால் பல வெளிமாநில வேலைகளை கூட மறுத்துவிட்டேன். சின்னத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நட்சத்திர தொகுப்பாளிகளுக்கு மட்டுமே மரியாதை இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட சேனலை சேர்ந்தவர்கள் தான் நட்சத்திர தொகுப்பாளினிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்கு அந்த சேனல் பெரிய வெளிச்சம் கொடுக்கிறது. அதனால் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. மீடியாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து ஒதுக்கி விடுவார்கள் என்கிறார் சுமையா.